லாக்டவுன் சமயத்தில் இருந்து ஷூட்டிங் இல்லாத காரணத்தால் நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதில் அமலா பாலும் ஒருவர். வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது அதே போல கண்ணாடிபோல உடை அணிந்து கண்டபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமலா பால்
மாடலிங் துறையில் கால் பதித்தவர் அமலா பால். அதன் பிறகு அவருக்கு சிந்து சமவெளி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதன் பிறகே அவருக்கு மைனா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேக்கப் போடாமல் நடித்திருந்த அமலா பாலை ரசிகர்களுக்கு பிடித்து போகவே அதன் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல திரைப்படங்களில் நடித்திருந்தார் அமலா பால். அதன் பிறகு இளைய தளபதி விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் அந்த படத்தின் இயக்குனரான ஏ.எல்.விஜயை காதலித்தும் வந்தார். ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட ஏ.எல். விஜய் அமலா பால் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இரு வீட்டார் சமத்துடனும் இவர்களுக்கு திருமணமும் நடந்தது.
ஆனால் 2 வருடம் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு சுதந்திர பறவையாக மாறிய அமலா பால் வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
நவராத்ரி பூஜை என்ற பெயரில் கூட அகோரியாக மாறி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டார். ஆடை படத்திற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனார் அமலா பால். தற்போது கண்ணாடி வலைப்போல ஆடை அணிந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.