“வேலை கிடைத்தால் உயிரை விடுவேன்” – வேண்டுதலை நிறைவேற்றிய வங்கி மேலாளர்!!

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழுவிளை என்னும் பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு வயது 32. இவர் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்து கடவுள் பக்தி அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் படிப்பை முடித்து பல ஆண்டு காலமாக வேலை கிடைக்கவில்லை, வங்கி தேர்வும் எழுதி உள்ளார் இருந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, எனக்கு வேலை கிடைத்தால் என் உயிரை காணிக்கையாக தருவேன் என்று கடவுளிடம் வேண்டியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல ஆண்டுகளாக வேலை கிடைக்கவில்லை, இந்நிலையில் தற்போழுது வேலை கிடைத்துள்ளது. 15 நாட்களுக்கு முன் மும்பையில் பேங்க் ஆஃ ப் இந்தியா வங்கியில் உதவி மேலாளராக பணியில் அமர்ந்தார்.  வேலைக்கு சென்று 15 நாட்களுக்கு பின் நேற்று மும்பையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளார் நவீன். அங்கிருந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பனை பார்த்து பேசிவிட்டு, தனது சகோதரியிடம் ஊருக்கு வந்துள்ளேன் என்று தொலைபேசியில் கூறியுள்ளார். இதையடுத்து நாகர்கோவில் வந்தார் நவீன். புத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே தண்டபாலத்தில் பாய்ந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து தகவல் அறிந்து ரயில்வே போலீசார் உடலை மீட்டு கன்னியாகுமாரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணையில் நவீனிடம் ஒரு கடிதம் இருந்தது. அதில், “நான் பல காலமாக வேலை இல்லாமல் இருந்தேன், எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே வேலை கிடைத்தால் என் உயிரை காணிக்கையாக தருவதாக வேண்டினேன். பின் எனக்கு வேலை கிடைத்தது. எனவே என் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நான் இறைவனிடம் செல்கிறேன்” என்று இருந்தது. இதை பார்த்த போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

வேலை கிடைக்காமல் தற்கொலை செய்யும் நபர்களுக்கு மத்தியில் வேலை கிடைத்தும் தற்கொலை செய்து கொண்ட நவீனின் அளவுக்கு மீறிய மூடநம்பிக்கையை இதற்கு காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here