தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, புதிய தளர்களுடன் பின்பற்றப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய அறிப்பு வெளியாக உள்ளது. இதில் பள்ளிகள் திறப்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
தமிழக மக்களிடம் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளை கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் மீண்டும் திறப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகள் திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் சமீபத்தில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை அளித்துள்ளனர். அந்த நிலையில் இன்று வெளியாகும் ஊரடங்கில் திரையரங்குகளை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை புறநகர் ரயில் சேவைகள் மற்றும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் மத்திய அரசு நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.