டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவிப்பு..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாமல் இருக்கின்றனர். ஆதலால் நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
ஊரடங்கு முடியும் வரை இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் பியூச்சர் போன் கொண்டுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்களது ப்ரீபெய்டு பேக்குகள் மே 3ஆம் தேதி ஆதாவது லாக்டவுன் காலம் முடியும் வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
பார்தி ஏர்டெல் அறிவிப்பு..!
பார்தி ஏர்டெல் நிறுவனமும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் மே 3 வரையில் இன்கம்மிங் கால்கள் அனைத்தும் வரும் எனத் தெரிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் அறிவிப்பு.!
இதோடு ஜியோ புதிதாக JioPOS Lite என்ற செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் பயன்படுத்து மற்ற ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்குக் கமிஷன் கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
டிராய் அறிவுரை..!
பேஸ்புக்கில் வரப்போகும் 7வது எமோஜி – இதயத்தை தவழும் செண்டிமெண்ட் முகம்..!
இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் சில வாரங்களுக்கு முன்பு டெலிகாம் நிறுவனங்களை தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஏற்பட மே 3 தேதி வரையில் டேட்டா கொடுக்குமாறு அறிவுறுத்தியது. இந்தச் சலுகை குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரிய அளவில் உதவும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |