கடலூரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சீதாபதி என்பவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அளவீடு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன் பேரில் பிரச்சனைக்குரிய நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர் மகேஸ்வரன் என்பவர் சென்று இருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போது நில அளவையருக்கும் சீதாபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த முன்னாள் கவுன்சிலர், போலீசார் முன்னிலையிலேயே நில அளவையரை செருப்பால் தாக்கி உள்ளார். செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.