பொதுவாக நம்மில் பலர் தலைமுடியை வாஷ் செய்ய ஷாம்பு யூஸ் செய்து வருவது வழக்கம். அப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் நம்முடைய முடி அதிக வறட்சியை சந்திக்கும். அதாவது கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் நம்முடை முடியின் ஈரப்பதத்தை வறட்சியாக மாற்றிவிடும். முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் இதில் இருந்து நம் கூந்தலை பாதுகாக்க இப்போது எளிய முறையில் தயாரிக்கும் ஹேர் பேக் ஒன்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் – 100 கிராம்
- வாழைப்பழம் – 2
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்
இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு 100 கிராம் தேங்காயை எடுத்து நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி கொள்ளவும். பின்னர் 2 வாழை பழத்தை தோல் நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் தேங்காய் பாலுடன் இதை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். மேலும் அதில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ளவும். இப்போது இந்த ஹேர் பேக்கை நம் தலைமுடியில் அப்ளை செய்யவும். அதன் பின்னர் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு மைல்டான ஷாம்பு யூஸ் செய்து தலை முடியை வாஷ் செய்து கொள்ளவும்.