சினிமாவில் ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்து அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினியுடன் சேர்ந்து பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரீப்ரியா சூப்பர் ஸ்டார் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது தனியார் பத்திரிகை ஒன்றில் ஸ்ரீப்ரியா அவரது அப்பா, அம்மாவிடம் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று செய்தி வெளியானதாம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதை பார்த்து பதறிப்போன ரஜினி பைக்கை எடுத்துக்கொண்டு ஸ்ரீப்ரியாவின் வீட்டுக்கு சென்றாராம். வீட்டுக்குள் நுழைந்தவுடன் “என்ன ஆச்சு உங்களைப் பற்றி பத்திரிக்கையில் இப்படி வந்திருக்கு” . தாய் தந்தை தான் எல்லாமே,அவர்களை பிரிந்து போய் வாழாதீர்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் தான் நமக்கு பெருமையும், நிம்மதியும் கிடைக்கும் என கூறியுள்ளார். அதற்கு ஸ்ரீப்ரியா ஐயோ அப்படி எல்லாம் இல்லை அது பொய்யான செய்தி என்று கூறிய பின்னரே ரஜினிகாந்த் அங்கிருந்து சென்றாராம். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.