ரசிகர்கள் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்ததாக தற்போது ஜீ தமிழ் முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதத்தில் இருந்து டிவியில் டெலிகாஸ்ட் ஆகிவரும் ”சீதாராமன்” சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்காத அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதில் சீதாவாக நடித்து வரும் பிரியங்காவின் அசத்தலான நடிப்பினால் இந்த சீரியலுக்கான டிஆர்பியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இதில் அழகாக இல்லை என்பதற்காக தன் வீட்டுக்கு மருமகளாக வந்த சீதாவை வீட்டை விட்டு வெளியேற்ற சூழ்ச்சி திட்டம் தீட்டி வருகிறார் மஹாலக்ஷ்மி. இதை தெரிந்து கொண்ட சீதா அவரது அத்தை மகாலக்ஷ்மியை எச்சரிக்கிறார். இப்படி எதிரெதிர் துருவங்களாக இருந்து வரும் மாமியார் மருமகள் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி இருக்க இந்த சீரியலை களத்தை இன்னும் சூடாக்க ”புது புது அர்த்தங்கள்” சீரியல் ஆக்ட்ரஸ் ஷாலு இதில் என்ட்ரி கொடுக்கிறார்.
கர்ப்பமான இருந்த சம்முவை அனுஅனுவாக சித்ரவதை செய்த நாகசைதன்யா.., இதுதான் விவாகரத்திற்கு காரணமா??
மேலும் இதன் ப்ரோமோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதாவது அமெரிக்காவில் இருந்து மகாலக்ஷ்மியின் தோழி அவரது வீட்டுக்கு வந்த இடத்தில் ராமனின் மனைவியை வரச்சொல்லு பார்க்க வேண்டும் என கேட்கிறார். அதற்கு அவர், இல்லை திருமணம் நின்று விட்டது என சொல்லி, அங்கிருந்த சீதாவை தன் வீட்டில் கிழிந்த ஆடைகளை தைக்கும் வேலைக்காரி என கூறுகிறார். இதை கேட்ட சீதா தன்னை அவரது தோழியிடம் தன்னுடைய மருமகள் என அறிமுகப்படுத்த வேண்டும் என தன் அத்தையை எச்சரிக்கிறார்.