நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து காரணம் குறித்து பாலிவுட் விமர்சகர் ஒருவர் ட்வீட் செய்த சம்பவம் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகை சமந்தா – நாக சைதன்யா:
கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு டப்பிங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை சமந்தா. இந்த படத்திற்கு பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறி கடந்த 2017ம் ஆண்டு திருமணத்தில் போய் முடிந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் இந்த திருமணமே கடைசி வரைக்கும் நீடிக்காமல் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அவர்கள் பிரிவு குறித்து பல காரணங்கள் வெளியாகின. ஆனால் தற்போது வரை என்ன காரணம் குறித்து இரு தரப்பினரும் சொல்லவில்லை. இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து காரணம் குறித்து பாலிவுட் விமர்சகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
அதாவது விமர்சகர் உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, நடிகர் நாக சைதன்யா ஒரு மோசமான கணவர், அவரால் நடிகை சமந்தா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளார். சமந்தா கர்ப்பமாக இருக்கும் பொழுது, அவரை கருக்கலைப்பு செய்ய சொல்லி நாக சைதன்யா அதிகம் டார்ச்சர் செய்துள்ளார். அதனால் தான் அவர் விவாகரத்து செய்துள்ளார் என்று உமர் சந்து சர்ச்சைக்குரிய ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.