தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சமந்தா. தற்போது எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வரும் நிலையில் இப்பொழுது சென்னை ஸ்டோரிஸ் ஆங்கில வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பொதுவாக சமூக சேவையில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று எல்லாருக்குமே, தெரிந்த விஷயம் தான்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் பிரத்யுக்ஷா சப்போர்ட் என்ற தன்னார்வ நிறுவனத்தின் மூலம் பல உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருந்து 2 பெண்கள் தத்து எடுக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.