சீரியல் துறையில் இருந்து சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தற்போது அருவியில் தான் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சீரியல் டு சினிமா
தமிழ் சினிமா துறையினை பொறுத்தவரை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிப்பு துறையில் ஜெயிக்கலாம் என்று உணர்த்தியவர்கள் பலர்.
அந்த வகையில் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியலில் நடித்து தற்போது தனது கடின முயற்சி மூலமாக சினிமா துறையில் கலக்கி வருபவர் தான், நடிகை பிரியா பவானி ஷங்கர். ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார், பிரியா.
டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி – லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!
பின், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த சீரியல் தான் இவருக்கு மைல் ஸ்டோன் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலிற்கு பின் தான் பலரது கவனத்தையும் பெற்றார்.
அதன் பிறகு தமிழில் நடிகர் வைபவ் உடன் “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து “கடைக்குட்டி சிங்கம்” “மான்ஸ்டர்” போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது தனது கைவசம் பல படங்களை வைத்துஇருக்கும் பிரியா, அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அதே போல் தற்போது அருவியில் குளிப்பது போல் உள்ள தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.