கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பூர்ணா, பெண்கள் அனைவரும் திருமண மோசடி கும்பலிடம் சிக்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்
நடிகை பூர்ணா:
கடந்த 2008ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு தன்னை திருமண செய்வதாக மோசடி செய்ததை வெளிப்படுத்தி திருமண மோசடி கும்பலை போலீசில் பிடித்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் கடந்த ஜூன் மாதம் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சானித் ஆசிப் அலி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் பூர்ணா கொடுத்த பேட்டி ஒன்றில், கடந்த 2, 3 ஆண்டுகளாக என குடும்பத்தினர் எனக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் எந்த வரனும் அமையாமல் இருந்தது. சில வரன்கள் எங்களுக்கு பிடிக்காமல் இருந்து வந்தது. சில வரன்கள் நான் நடிகையாக இருப்பதால் என்பதற்காகவே தள்ளி போனது. என்னுடைய கல்யாணம் தள்ளிபோனதால் வேறு சாதியிலோ, மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என்று என் அம்மா கவலை அடையும் அளவிற்கு சிலர் கேள்வி கேட்டனர்.
டிஆர்பி ரேட்டிங்கை தாண்டி மற்றுமொரு சாதனை படைத்த கயல் சீரியல்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
மேலும் கடந்த ஜூன் மதாம் எனக்கு கல்யாணம் நடந்துள்ளதால், அம்மா மிகவும் சந்தோசமாக உள்ளார். சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் நகைக்கடை அதிபர் என கூறி என்னை ஒரு மோசடி கும்பல் ஏமாற்ற முயன்ற நிலையில், எந்த ஒரு பயமும் இல்லாமல் அவர்களை போலீசில் பிடித்து கொடுத்தேன்.இந்த மாதியான மோசடி கும்பலால் ஏரளமான பெண்கள் ஏமாற்றப்படுகிறார்.
எனவே அனைவரும் எப்போதும் உசாராக இருக்க வேண்டும். திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது அங்கீகாரம் பெறாத மேட்ரிமோனிகளில் பெண்கள் தங்கள் போட்டோக்களை ரெஜிஸ்டர் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட பெண்களின் கதையை கேட்கும் போது, அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.