சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சீரியலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் மாறியுள்ளது.
கயல் சீரியல்:
சின்னத்திரையில் பல சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் சன் டிவி சீரியல்களுக்குத்தான் எப்போதுமே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு அதிகமாக ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கயல் கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக கலக்கி வந்தவர். மேலும் எழில் கேரக்டரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்பா இல்லாததால், குடும்ப சுமையை தன் தலையில் சுமந்து சுமை தாங்கும் பெண்ணாக சைத்ரா இந்த சீரியலில் வலம் வருகிறார். தன்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்ளும் பொறுப்பு இருப்பதால், கயல் திருமணம் செய்து கொள்ளாமல் அண்ணன், தம்பி, தங்கை வாழ்க்கை கனவுகளை நிறைவேற்ற ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே இந்த இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன.
வெண்பா கழுத்தில் தாலி கட்ட தயாரான பாரதி.., கடைசி நேரத்தில் அம்பலமான டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தற்போது சைத்ராவை கயல் என்று செல்லமாக அழைப்பதாக அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். தற்போது இந்த கயல் சீரியல் ஒரு வருடம் ஓடி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு கயல் டீமுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் சன் டிவி போஸ்ட் பதிவிட்டுள்ளது.