“ஏ வேலைய நீங்க செஞ்சு என்னை காப்பாத்திட்டீங்க”…, நன்றி உணர்வுடன் தினேஷ் கார்த்திக்!!

0

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தை அடித்து இந்திய வெற்றிக்கு குட் பினிஷராக இருந்த அஸ்வினுக்கு தினேஷ் கார்த்திக் நன்றி கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்:

டி20 உலக கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி, பார்ப்பவர்களை உயர் அழுத்தத்திற்கு கொண்டு சென்றது. இதில், கடைசி ஓவரின் கடைசி பந்தில் தான் இந்தியா த்ரில்லான வெற்றி பெற்றது. இந்த போட்டியில், முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற விராட் கோஹ்லி மற்றும் ஹர்திக் பாண்டியா நிலைத்து நின்று விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்கள் இருவருமே இந்தியாவை வெற்றி பெற செய்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் இவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் வெளியேறினர். இந்திய வெற்றிக்கு 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்து ஒயிடு என்பதை அறிந்த அஸ்வின் டச் கூட செய்யாததால் ஒரு ரன் கிடைத்தது. இதனை தொடர்ந்து வெற்றிக்கான பந்தை சந்தித்த அஸ்வின் அடித்து இந்திய வெற்றிக்கு வழி வகுத்தார்.

கோலிக்கு இன்ஸ்டாவில் பறந்த காதல் கடிதம்.., ஒரே ஆட்டத்துல எல்லாத்தையும் இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க!!

இந்த போட்டி குறித்த பதிவில் தினேஷ் கார்த்திக், அஸ்வினுக்கு நன்றி கூறியுள்ளார். அதாவது, ஒரு பினிஷராக நான் செய்ய தவறியதை அஸ்வின் செய்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்று வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்திய அணி டி20 உலக கோப்பையில் அடுத்ததாக நெதர்லாந்து அணியை வரும் வியாழன் அன்று எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here