பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்ப வாய் புற்றுநோயால் நேற்று உயிரிழந்தார். மேலும் இவரது மேலாளர் சோசியல் மீடியாவில் பூனம் உயிழந்த செய்தியை தெரிவித்திருந்தார். இதையடுத்து இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவரது குடும்பத்துக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர். ஆனால் இவர் இறந்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இவர் இறப்பதற்கு முதல் நாள் வரை இன்ஸ்டாவில் தனது ரீசன்ட் வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.
அப்படி இருக்கையில் எப்படி திடீரென உயிரிழந்திருக்க முடியும் என பலர் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட வீடியோ அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. இதோடு கர்ப்ப வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென உயிரிழக்க வாய்ப்பில்லை என்பதால் பூனம், உயிரிழந்ததாக நாடகமாடி அதன் மூலம் நாடகமாடுகிறார் என பலர் கூறுகின்றனர்.