கேரளா மாநிலத்தை சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின், தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் பிரபல நடிகையாக ஜொலித்து வந்தார். இதன்பின் 2014ஆம் ஆண்டு திருமணம் முடிந்த பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் குயின் எலிசபெத், விமானம், மக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
என் பொண்டாட்டிய பேச நீங்க யாரு.., ஈஸ்வர்யிடம் எகிறிய எழில்.., பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!!!
இந்நிலையில் எர்ணாகுளத்தில் இருந்த மீரா ஜாஸ்மீனின் தந்தை ஜோசப் பிலிப் (வயது 83), இன்று (ஏப்ரல் 4) வயது மூப்பு காரணமாக காலமானார்.இவரது மறைவுக்கு திரையுலகினர் உட்பட பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.