தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், பொதுமக்கள் வாக்களிக்க எதுவாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதியன்று பொது விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இந்நாளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!