தமிழ் திரையுலகின் 90களில் நடித்து வந்த முன்னாள் நடிகையான மாளவிகா, தற்போது ஒரு விபத்தில் சிக்கியதாகவும், அந்த விபத்தால் விரலை உடைத்து கொண்டதாகவும் கூறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகை மாளவிகா
தமிழ் திரையுலகில் 90களில் முக்கியமான நடிகையாக இருந்தவர் நடிகை மாளவிகா. கர்நாடகாவை சொந்த மாநிலமாக கொண்ட நடிகை மாளவிகா அதிகமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் இவர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
1999ம் ஆண்டு வெளியான ‘உன்னைத்தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகுக்கு அறிமுகமானார் மாளவிகா. தொடர்ந்து ‘ஆனந்த பூங்காற்றே’, ‘ரோஜாவானாம்’ ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘லவ்லி’, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர்.
90களில் வெளியான ‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’ என்ற பாடல் மக்கள் மத்தியில் இன்றுவரை பிரபலமாக உள்ளது. இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் நடிகை மாளவிகா தான் மனதுக்குள் வருவார்.
இணையத்தில் ட்ரெண்டாகும் சித்ராவின் ‘கால்ஸ்’ புகைப்படங்கள் – வைரலாக்கும் ரசிகர்கள்!!
அந்த அளவுக்கு அந்தப் பாடலோடு சேர்த்து அவரும் பிரபலம். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கும் நடிகை மாளவிகா, அவ்வப்போது சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அவ்வாறு அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
காரணம், நடிகை மாளவிகா சைக்ளிங் சென்ற போது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் அவருக்கு முகத்தில் சிறிய காயங்களுடன், விரல் ஒன்று உடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கூடவே புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த விபத்திலிருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார் மாளவிகா.