பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனவர் தான் குமரன். இந்த சீரியலில் இவர் நடிப்பதற்கு முன்பாக விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி, சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் பாண்டியன் ஸ்டோரில் இவர் என்ட்ரி கொடுத்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் குமரன் வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவின் முதல் படிக்கல்லாக ஓடிடியில் நடித்து அசத்தி வருகிறார். இது குறித்து இவர் பேட்டியில் கூறுகையில் s.j. சூர்யா சாருடன் இணைந்து வதந்தியில் நடித்தது, தற்போது மீண்டும் மாய தோட்டா என்ற web சீரிஸில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சபாஷ்…, சரியான போட்டி.., லேடி சூப்பர் ஸ்டாரை பீட் செய்த தீபிகா படுகோனே.., அதுவும் இந்த விஷயத்துல!!
இப்படி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் சீரிஸில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது. மேலும் மாய தோட்டாவில் நான் Z பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரி என்பதால் என்னுடைய உடல் பாவனை, மொழி எல்லாம் மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் எப்படியோ சீரியலில் கதிர் ரோலை சமாளித்து நடித்து விட்டேன். ஆனால் இதை வரும் காலங்களில் மேனேஜ் செய்வது மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என்பதால் சீரியலில் இருந்து விலகுவது குறித்து ஏற்கனவே சீரியல் குழுவிடம் பேசியுள்ளேன் என அவர் மனதில் இருப்பதை ஓப்பனாக கூறியுள்ளார்.