பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி சீரியலை விட்டு விலகிய காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல கமல் பட நடிகையின் தந்தை திடீர் மறைவு – அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்!!
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த காரணத்தால் சீரியலை விட்டு விலகி விட்டார். அவரை தொடர்ந்து சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்த அகிலனும் விலகி விட்டார். அவர்களுக்கு பதிலாக தற்போது சீரியலில் வேறு புதுமுக நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலக உள்ளதாக தெரிவித்து இருந்தார். அவருக்கு பதிலாக அருள்ஜோதி என்ற புதுமுகம் வர உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை கண்மணி மனோகரன் விலக காரணம் என்னவென்றால், பாரதி கண்ணம்மா சீரியலில் தொடக்கத்தில் வில்லியாக இருந்த அஞ்சலியை பிறகு கண்ணம்மா விற்கு ஆதரவு தரும் நல்லவராக மாற்றி விட்டனர். அதனால் வில்லியாக இருந்த போது கிடைத்த மவுசு அதன் பின்னர் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக வர உள்ள ‘அமுதாவும் ..?’ என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கண்மணிக்கு ஜோடியாக நடிகர் அருண் பத்மநாபன் நடிக்க இருக்கிறார். இதை கேள்விப்பட்ட நடிகை கண்மணி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்