நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் திருமணம் முடிவடைந்த நிலையில் இப்போது அவர் செய்து இருக்கும் காரியத்தை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானி :
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. சமீபத்தில் இவர் நடித்த மகா என்ற திரைப்படம் ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. தற்போது பார்ட்னர், ரவுடி பேபி, கார்டியன் என்ற திரைப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்படி பிஸியாக நடித்து வரும் இவர் சோஹேல் கதுரியா என்ற தொழில் அதிபரை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ஹன்சிகா மோத்வானியை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ஹன்சிகா மோத்வானி 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் பேசியதாவது, என்னுடைய அம்மா நான் சிறு வயதில் இருக்கும் பொழுது ஏதாவது பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவ்ளோதான், எல்லாம் முடிஞ்சு., இனி திரும்பி வர வாய்ப்பில்லை! ஆலியா மானசாவின் அதிரடி விளக்கம்!!
அவர்களின் சொல்லைக் கேட்டு வளர்ந்த நான், தற்போது 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். என்னுடைய திருமணத்திற்கு பிறகு நான் செய்யும் முதல் நல்ல காரியம் இதுவே. மேலும் கல்யாணத்திற்கு பிறகு சினிமாவில் ஓய்வு பெற்று வந்த நிலையில், வருகிற 20 ம் தேதி முதல் வழக்கம்போல் படங்களில் நடிக்க போகிறேன். இதுவரை என்னிடம் ஏழு படங்கள் கைவசம் இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.