சின்னத்திரை டாப் நடிகையான ஆலியா மானசா, தன்னுடைய சீரியல் வாழ்க்கை குறித்த பதிவுகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆலியா பதிவு :
சின்னத்திரையின், ஃபேவரிட் ரியல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் சஞ்சீவ்-ஆலியா மானசா. இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு, காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆலியா மானசா நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சமீபத்தில் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கிய இவர், சிறிய அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் சீரியலில் கம் பேக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு சினிமாவில் நடிக்க வருவது எவ்வளவு கஷ்டம் என்பதை உருக்கமாக பேசியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மாமனார் மாமியாரா இது? நீங்கள் பார்த்திராத Rare clicks!!
அதாவது, ஒவ்வொரு முறையும் நான் இடைவெளி எடுக்கும் போது அவ்வளவுதான், எவ்வளவு காலத்துக்கு தான் நீ ஹீரோயினா நடிப்ப? இனிமேல் நீ திரும்பி எல்லாம் வர முடியாது, என என் முன்னாடியே பேசுவார்கள். அதையெல்லாம் தாண்டி, என் கனவிற்காக நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் உழைப்பேன் என தைரியமாக பேசியுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.