“யார காப்பாத்த என் மகன கைது பண்ணீங்க??” ஹேம்நாத்தின் தந்தை கேள்வி!!

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அவரது கணவரை போலீசார் தொடர்ந்து 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல உண்மைகள் வெளி வந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஹேம்நாத்தின் தந்தை “யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்?” என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்ரா தற்கொலை காரணம்:

சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த நடிகைகளின் ஒருவரான சித்ரா கடந்த 6-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்த சித்ரா தன்னுடைய நடிப்பு திறமையால் பலர் மனதையும் சம்பாரித்தார். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சித்ரா ஆடி கார், பங்களா வீடு என வாங்கியதில் பெரும் கடன் சுமைக்கு தள்ளப்பட்டார். அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதும் அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தான் பொருளாதார சிக்கலில் இருக்கும் பொது தன் கணவர் எந்த உதவியும் செய்யாமல், சகா நடிகர்களோடு நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் அவரது கணவருக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் இதன் காரணமாக அவரது தாய் இந்த கல்யாணத்தை நிறுத்துமாறு கூறியது என பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

கோழிப் பண்ணையாக மாறிய பிக் பாஸ் வீடு!!

ஹேமநாத் கோபத்தில் சித்ராவிடம் ‘நீ செத்துத் தொலை’ என கூறியுள்ளனர். அதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் போலீசார் ஹேமந்தை நேற்று இரவு கைது செய்தனர். இதுகுறித்து ஹேமந்தின் பெற்றோரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஹேம்நாத்தின் தந்தை “யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்?” என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவசரமாக வேறு ஒருவரை காப்பாற்றும் நோக்கில் என் மகனை கைது செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here