இயக்குனர் வினோத் நடிகர் அஜித்தை வைத்து துணிவு திரைப்படத்தை எடுத்து முடித்த நிலையில் அடுத்த படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் யோகி பாபு :
தமிழ் சினிமாவில் காமெடியில் பின்னி பெடல் எடுக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் யோகி பாபு. சமீபத்தில் அவர் நடித்த லவ் டுடே மற்றும் காபி வித் காதல் திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அந்தகன், சூரப்புலி, சுந்தரா டிராவல்ஸ் 2, தலைநகரம் 2, வாரிசு, ஜெயிலர் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் யோகி பாபு வைத்து இயக்குனர் வினோத் படம் எடுக்க இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இயக்குனர் வினோத் படைப்பில் துணிவு திரைப்படம் உருவாகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி வைத்து அடுத்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து படக்குழுவினர் அறிவிப்பை அடுத்த ஆண்டு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தாரில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தீபிகா படுகோனே.., முதல் இந்திய நட்சத்திரம் இவங்க தான்!!
மேலும் கமல் நடிக்கும் இந்த படத்திற்கு பிறகு தான் நடிகர் யோகி பாபுவை லீடு ரோலில் வைத்து படம் இயக்க இருப்பதாக சமீபத்தில் ஆங்கில சேனலில் நடந்த பேட்டி ஒன்றில் வினோத் கூறியுள்ளார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.