நடிகர் விவேக் நேற்று தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதற்கான காரணம் தெரியாத நிலையில் தற்போது முதல்வருடனான சந்திப்பு பற்றி விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் ட்வீட்
நேற்று திரைப்பட நடிகர் விவேக் தமிழக முதல்வரை அவரது அலுவலக்தில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமியின் ட்விட்டர் கணக்கில், ‘திரைப்பட நடிகர் திரு.விவேக் இன்று முகாம் அலுவலகத்தில் என்னை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்’ என்று பதிவிடப்பட்டிருந்தது.
கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு இனி மாதந்தோறும் விருது – ஐசிசி முடிவு!!
இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்ததற்கான காரணம் குறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில், ‘என் சொந்த காரணகங்களுக்காகவோ அரசியல் காரணமாகவோ முதல்வர் அவர்களை சந்திக்கவில்லை. தமிழ்த்துறவி வள்ளலார் தன் வாழ்நாளில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கினார். அவர் நடந்து வந்த திருவொற்றியூர் பாதையை வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்ட கோரி மனு அளித்தேன். இன்முகத்துடன் வரவேற்றார். நற்செய்தி வரலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.