கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு இனி மாதந்தோறும் விருது – ஐசிசி முடிவு!!

0

இனி மாதந்தோறும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த முடிவை தற்போது ஐசிசி எடுத்துள்ளது.

ஐசிசி:

ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் அணிகளின் பெயர்களை பட்டியலிட்டு வெளிட்டு வருவதை வாடிக்கையாக ஐசிசி வைத்துள்ளது. மேலும் அவர்கள் புள்ளிகள் அடிப்படையில் பட்டியளிப்படுவார்கள். தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்த 10 ஆண்டுகளில் யார் சிறந்த வீரர் என்பதை அறிவித்திருந்தது. இதில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி 20 அணிகளுக்கான கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். மேலும் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக விராட்கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘நான் விஜய்க்கு நல்லது தான் செய்வேன்’ – எஸ்.ஏ.சி விளக்கம்!!

தற்போது ஐசிசி குழு ஓர் புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளது. அது என்னவென்றால் இனி வரும் காலங்களில் மாதந்தோறும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் சிறந்த வீரர்களை ரசிகர்கள் இணையம் மூலம் தேர்வு செய்யலாம். இதில் முன்னாள் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. முதல் மாத விருத்திற்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடராஜன், ரிஷாப் பாண்ட், அஸ்வின், சுந்தர் மற்றும் சிராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here