தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரும் மற்றும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில தினங்களுக்கு முன்பாக தனது மகன் விஜய் பெயரில் ஓர் கட்சியை ஆரம்பித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது விஜய் குறித்து எஸ்.ஏ.சி ஓர் தகவலை வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஏ.சி:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் தளபதி விஜயின் தந்தை தான் எஸ்.ஏ.சந்திரசேகர். விஐய் தொடக்க காலத்தில் சினிமாவிற்குள் நுழைவதற்கு பெரும் பாலமாக இவரது தந்தை எஸ்.ஏ.சி தான் இருந்துள்ளார். விஜயின் இந்த வளர்ச்சிக்கு அவர் தந்தையும் ஓர் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். தற்போது சில தினங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சி ஓர் அதிர்ச்சியான செயலை செய்தார். அது என்னவென்றால் தன் மகன் விஜய் பெயரில் அகில இந்தியா தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஓர் கட்சியை தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆரம்பத்தில் இந்த கட்சியை தளபதி தான் தொடங்கினார் என்று விஜயின் ரசிகர்கள் குழம்பி வந்தனர். அதன்பிறகு தான் இதனை எஸ்.ஏ.சி செய்துள்ளார் என்று தெரியவந்தது. பின்பு இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து, தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே எஸ்.ஏ.சி இந்த கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஓர் கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் விஜய் இதுகுறித்து தனது தந்தைக்கு ஓர் வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளார்.
அது என்னவென்றால், தனது உரிமம் இன்றி தனது பெயரையோ, புகைப்படங்களையோ உபயோகிக்க கூடாது என்று அனுப்பியுள்ளார். மேலும் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக்கூடாது என்றும் கட்டளையிட்டார். அதன்பின்பு எஸ்.ஏ.சி தனது பெயரில் ஓர் கட்சியை துவங்கினர். அந்த கட்சிக்கு அனைத்து இந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் ஓர் கட்சியை துவக்கினார். இதனால் இவருக்கு இந்த வயதில் அரசியல் ஆசை தேவையா?? என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். பின்பு இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார் எஸ்.ஏ.சி.
அவர் கூறியதாவது நான் அரசியல் கட்சி விஜய்க்காக தான் ஆரம்பித்துள்ளேன். மேலும் நான் அவருக்கு ஒரு போதும் தீங்கு நினைக்கமாட்டேன். நான் அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்கிறேன். அதனை விஜய் தவறாக புரிந்து கொள்கிறார். அவரை சுற்றி உள்ளவர்கள் விஜயை குழப்பிவிடுகிறார்கள். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் 100 ரூபாய்க்கு பட டிக்கெட்டை வாங்கி 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் எஸ்.ஏ.சி.