கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது படப்பிடிப்பு வேலைகளை துவங்கியுள்ளார். படப்பிடிப்பில் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா:
தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் தான் சூர்யா. இவர் படத்தில் நடிக்க மட்டும் செய்யாமல் பல படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தான் சூரரை போற்று. இந்த படம் கடந்த கொரோனா காலத்தில் ஓடிடி தலத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஆஸ்கர் ரேஸிலும் இந்த படம் கலந்துகொண்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் இந்த படம் ஆஸ்கர் விருதை பெறாதது சற்று ஏமாற்றமே. சில தினங்களுக்கு முன்பு சுறியாவிற்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது என்னும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதனால் இவரது ரசிங்கர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டி வந்தனர். இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து தற்போது முழுவதுமாக மீண்டுள்ளார்.
சீரியலுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த காரியத்தை பாருங்க – வைரலாகும் புகைப்படம்!!
கொரோனாவில் இருந்து மீண்ட சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் தனது 40வது படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது இவர் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Feels good to be back on sets! @pandiraj_dir @RathnaveluDop @immancomposer @sunpictures @AntonyLRuben @jacki_art @anbariv #Suriya40 pic.twitter.com/gcxlpdafwc
— Suriya Sivakumar (@Suriya_offl) March 18, 2021