நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் – 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வன்னியர் சங்கம் நோட்டீஸ்!!

0
மீண்டும் விஸ்வருபமெடுக்கும் ஜெய்பீம் விவகாரம் - சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு பதித்த போலீஸ்!!
மீண்டும் விஸ்வருபமெடுக்கும் ஜெய்பீம் விவகாரம் - சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு பதித்த போலீஸ்!!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதால்,  அதற்கு நஷ்ட ஈடாக சூர்யா சார்பில் ஐந்து கோடி வழங்குமாறு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வன்னியர் சங்கம் நோட்டீஸ்:

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.  வெளியான நாள் முதல் இன்று வரை பல மக்களின் மிகப்பெரிய ஆதரவை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இன்னும், குறிப்பாக சொல்லப்போனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா இயக்குனர்கள் உள்ளிட்டோரும் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த படம் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் வன்னியர் சமூகம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் இன்னும் 7 நாட்களில் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here