நடிகர் சூர்யா நடித்த “சூரரைப் போற்று திரைப்படம் ஊரடங்கு காலத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் படம் ஆகும். இப்படத்திற்கு தணிக்கை குழு “யூ” சான்றிதழ் வழங்கி உள்ளது.
சூரரை போற்று:
சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த திரைப்படம் “சூரரை போற்று” ஆகும். இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்கப்பட்டது. இப்படம் சூர்யாவின் நிறுவனம் ஆன 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கின்றார். சுதா கொங்கரா இப்படத்தை இயங்குகிறார். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும்.
கால தாமதம்:
இந்த படம் கடந்த மாதங்களுக்கு முன்பே வர தயாராக இருந்தது, கொரோனா பரவலால் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்பட குழுவினர் தணிக்கை குழுவிற்கு அனுப்பி உள்ளனர். படத்திற்கு “யூ” சான்றிதழ் கிடைத்ததாக இப்படத்தின் இசை அமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். கூடுதல் ஆக கொரோனா ஊரடங்கால் தணிக்கை பெற்ற முதல் படம் இதுவே ஆகும்.
தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு:
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை இணைய தளத்தில் வெளியிட்டதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யா படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.