தொடரும் நில மோசடி வழக்கு.., மத்திய குற்றப்பிரிவிடம் நான்காவது முறையாக ஆஜரான நடிகர் சூரி !!

0
தொடரும் நில மோசடி வழக்கு.., மத்திய குற்றப்பிரிவிடம் நான்காவது முறையாக ஆஜரான நடிகர் சூரி !!
தொடரும் நில மோசடி வழக்கு.., மத்திய குற்றப்பிரிவிடம் நான்காவது முறையாக ஆஜரான நடிகர் சூரி !!

நடிகர் சூரி விஸ்ணு விஷால் தந்தையின் மீது நில மோசடி வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது இந்த இது குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக ரசிகர் மனதில் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் சூரி. இத்தனை வருடங்களாக காமெடியில் கலக்கிய சூரி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தை எதிர்நோக்கி ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் தந்தை நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகர் சூரி அடையார் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கவியாவை வெறுத்து ஒதுக்கிய குடும்பம்.., எல்லா சதி வேலையையும் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்கும் பார்வதி.., ஈரமான ரோஜாவே 2 எபிசோடு!!

இதனை தொடர்ந்து இந்த வழக்கை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நடிகர் சூரியிடம் விசாரணையை தொடங்கினர். இதுவரை கிட்டத்தட்ட மூன்று முறை இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் நிலையத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவின் கீழ் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்து வந்தார் . தற்போது நடிகர் சூரி நான்காவது முறையாக காவல்துறையிடம் ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here