கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலக கோப்பை தொடரை காண தமிழக ரசிகர்களுக்கு, அறிய வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கூறியுள்ளார்.
FIFA உலக கோப்பை:
FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், கால்பந்து நட்சத்திர வீரர்களான, லியோனல் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட பல வீரர்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் இவர்களுக்கு ரசிகர்கள் கட் அவுட் எல்லாம் வைத்து, கொண்டாடி வந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தொடரின் லீக் சுற்றுகள் மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் டிசம்பர் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிசம்பர் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், இந்த உலக கோப்பை தொடர் தமிழகத்திற்கு கத்தாரில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படாமல் இருந்தது.
உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்…, வெளியான தகவல்!!
இதனால், தமிழக கால்பந்து ரசிகர்கள் போட்டியை காண முடியாமல் தவித்தனர். இந்நிலையில், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள், செட்டாப் பாக்ஸ் மூலம், அரசு கேபிள் டிவியில் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல், sports 18 சேனலில் இந்த உலக கோப்பையை காணலாம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தமிழக கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.