காவியாவை வெறுத்து ஒதுக்கிய குடும்பம்.., எல்லா சதி வேலையையும் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்கும் பார்வதி.., ஈரமான ரோஜாவே 2 எபிசோடு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

ஈரமான ரோஜாவே 2:

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியா – பார்த்திபன், பிரியா ஜீவா இருவரும் சேர்வார்களா?? மாட்டர்களா?? என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது. இந்நிலையில் இப்போது புது ட்விஸ்ட் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது காவியா கல்யாணத்துக்கு முன்னதாகவே வேறு ஒருவரை காதலித்த விஷயம் அவரது மாமியார் பார்வதிக்கு தெரிய வருகிறது. இதனால் காவியாவையும் பார்த்திபனையும் பிரிப்பதற்காக பல சூழ்ச்சி வேலைகளை செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் காவியா மாமனார், மாமியாரின் 60 ஆம் கல்யாணத்திற்கான தாலியை பார்த்திபன் காவியாவிடம் வைத்திருக்கும் படி கொடுக்கிறார். ஆனால் காவியா தான் காதலித்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விடும் என்ற பயத்தில் தாலியை தனது மாமியாரிடம் கொடுத்து விட்டு நான் வெளியே போறேன் அத்தை எல்லார் கிட்டயும் சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால் பார்வதி காவியா கல்யாணம் நடக்க கூடாதுனு தாலிய எடுத்துட்டு போயிட்டா சொல்லி எல்லோரும் காவியாவை வெறுக்கும்படி ஒரு பொய்யை சொல்கிறார்.

கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மொத்தமாக மீண்டு வந்த மீனா.., அவரே வெளியிட்ட அழகிய வீடியோ!!

இதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் நம்பிக் கொண்டு காவியா வரவும் எங்கே போனாய் என கேட்கின்றனர். ஆனால் பார்வதி உண்மையை சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கியதால் காவியாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் குடும்பமே அவரை வெறுத்து ஒதுக்கி விட்டது. மேலும் இத்தனை நாள் காவியாவை உயிருக்கு உயிராக நினைத்த பார்த்திபன் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லிவிட்டார்.

\

இதன் பிறகு பார்வதி தனது மருமகளிடம் நான் பண்ணது மன்னிக்க முடியாத தப்பு தான். ஆனா உன்னையும், பார்த்திபனையும் பிரிக்க எனக்கு வேற வழி தெரியல காவியா என்னை மன்னிச்சிரு என சொல்லி அழுகிறார். அதற்கு காவியா அதுக்கு எனக்கு எதுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்தீங்க. நான் தான் பார்த்திபன விட்டு விலகி போறேன் சொல்லிட்டேனே. அப்படி இருந்தும் என்னை அசிங்கப்படுத்திட்டீங்களே என சொல்கிறார். இதனால் அடுத்த வரும் எபிசோடுகளில் காவியா நடந்த உண்மைகள் அனைத்தையும் சொல்வாரா?? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here