சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் ஷூட்டிங் பாதியிலே நின்று போனதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளியான தகவல்:
நடிகர் சிவகார்த்திகேயன் தனது டான், டாக்டர் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில், பிரின்ஸ் படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகவில்லை என்பதால், படத்திற்கு சிவகார்த்திகேயன் ரூபாய் 4 கோடிக்கு மேல் நஷ்டஈடு கொடுத்ததாக தகவல் வெளியானது.
வனிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த அசீம்.., இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!
இந்த படத்தை, தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் சென்று வரும் நிலையில், இந்த படம் பாதியிலே நின்று போனதாக தகவல் வெளியானது. அதாவது, இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த சிவகார்த்திகேயன், காட்சிகள் அனைத்தும் சரியாக வரவில்லை என அனைத்தையும் கேன்சல் செய்து மீண்டும், ஷூட்டிங் எடுக்க வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் காண்டான படக்குழு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இது குறித்து விளக்கம் அளித்த படக்குழு, ஷூட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், தரமான ஒரு படத்தை கொடுக்க தீவிரமாக உழைத்து வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.