விமான கட்டணத்தை, திடீரென பல மடங்கு உயர்த்துவதாக விமான நிர்வாகம் அறிவித்திருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயரும் கட்டணம்:
கொரோனா காலத்தில், விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. சூழ்நிலையை காரணம் காட்டி, இந்த கட்டணங்களை உயர்த்தலாம் என விமான நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் விரைவில் வர உள்ள கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு, விமான கட்டணங்களுக்கான முன்பதிவை நிர்வாகம் பல மடங்கு உயர்த்தி உள்ளது. சென்னை to கோவா கட்டணம் ரூபாய் 4,400 ஆகவும், சென்னை to டெல்லி கட்டணம் ரூபாய் 6000 ஆகவும், சென்னை to மதுரை கட்டணம் 4000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, சென்னை to துபாய் கட்டணம் ரூபாய் 11,000 முதல் ரூ. 20,000 வரை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணங்களில் இந்த திடீர் உயர்வு, பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.