இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்ட நிலையில், அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2:
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், சிம்பு போன்ற பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது மேடையில் நடிகர் சிம்பு பேசியதாவது, நான் குரு என்று நினைக்கும் கமல், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மணிரத்னம் சார் ஆகியோர் இங்க இருக்காங்க. அவங்க முன்னாடி பேசுறதுக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. நான் கொஞ்சம் கஷ்டப்பட்ட நேரத்துல செக்க சிவந்த வானம் என்ற படத்தில் என்னை நடிக்க வைத்து அழகு பார்த்தவர் தான் மணிரத்னம். சொல்லப்போனால் அவர் குழந்தை மாதிரி. அவருக்கு தேவையானதை அடம்பிடித்து வாங்கிவிடுவார். மேலும் நான் Schoolல படிக்கும் போது ஒரு Drawing போட்டி நடைபெற்றது.
IPL 2023., தோனியா இல்ல., ஹர்திக் பாண்டியாவா., இரண்டு சூரப்புலிகள் மோதும் தருணம்., வெற்றி யாருக்கு??
அதில் நான் ஐஸ்வர்யாவை தான் வரைந்தேன். அதுமட்டுமின்றி அதில் எனக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது. அவரை வரைந்ததால் தான் எனக்கு பிரைஸ் கிடைத்தது என்று ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசினார். அதற்கடுத்து நந்தினியை பிடிக்குமா? குந்தவையா பிடிக்குமா? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு சிம்பு ரெண்டு கண்ணுல எது பிடிக்கும்னு கேட்டா என்ன சொல்ல என்று கூறினார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.