CSK மற்றும் GT அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதல் IPL போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.
IPL 2023
இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த IPL போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சீசனுக்கான முதல் IPL போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணியும், தோனி தலைமையில் சென்னை அணியும் களமிறங்க உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
கடந்த சீசனில் IPL டைட்டில் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் CSK அணியும் பலம் வாய்ந்த அணி என்பதால் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத ஒரு புதிராகவே உள்ளது.மேலும் கேப்டன்ஷிப்பை பொறுத்தவரையில் ஹர்திக், தோனி இருவரும் அணியை வழி நடத்துவதிலும் சமபலத்தில் உள்ளனர்.
புருசனுக்கு மட்டுமில்ல, உங்களுக்கு good bye.., ஷாக் ரிப்போர்ட்டை சமந்தா!
சமீபத்தில் கூட ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று தொடர் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் அனைவரும் இவரை அடுத்த தோனி தான் என்று புகழ் பாட ஆரம்பித்தனர். இப்படி இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்குவதால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என பார்க்கலாம்.