உலகெங்கும் காலநிலை மாற்றத்தால் உருவாகி வரும் புது புது வைரஸ்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்துகளையும் சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில அரிய வகை நோய்கள் (Rare Disease) 10,000 பேர்களில் 5க்கும் குறைவானவர்களை பாதிக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் சிகிச்சைக்கான மருந்து கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. இப்படியாக உலகெங்கும் 7,000க்கும் மேற்பட்ட அரிய வகை நோய்களால் 400 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் 5% நோய்களுக்கு மட்டுமே வெவ்வேறு நாடுகளில் சிகிச்சை வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவில் கொண்டு வருவதற்கு சுங்க வரி உள்ளிட்ட செலவுகள் அதிக அளவில் இருப்பதால் ஏழை எளியோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இவ்வகை நோய்களுக்கான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பட்சத்தில் அதற்கு சுங்க வரி எதுவும் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பல நோயாளிகள் பயனடைவதால் பலரும் ஒன்றிய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.