நடிகர் சரத்குமார் லீடு ரோலில் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சினிமா விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சரத்குமார்:
கோலிவுட் வட்டாரங்களில் 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் சரத்குமார். அந்த வகையில் இவர் நடித்த சூரிய வம்சம், நாட்டாமை, சமுத்திரம் போன்ற பல படங்கள் வெற்றி வாகை சூடியது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி உலக அளவில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் வாரிசு படத்தை தியேட்டரில் பார்த்து விட்டு வரும் சினிமா விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தளபதி 67 இல் ரஷ்மிகாவின் முன்னாள் காதலன் இணைகிறாரா?? லோகேஷ் தரமான சம்பவம் பண்ண போறாரு!
அவர் பேசியதாவது, ஒரு நல்ல படத்திற்கு அற்புதமான விமர்சனங்களை கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் ரீவியூ மட்டுமே நல்ல படத்திற்கான அங்கீகாரத்தை பெற்று தரும். மேலும் ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு முடிவை எடுத்து கொள்ளட்டும். அதுமட்டுமின்றி உங்களின் தனிப்பட்ட கருத்துக்களை ரசிகர்கள் மீது தயவு செய்து நுழைக்காதீர்கள். தம்பி விஜய் ஹீரோவாக நடித்த வாரிசு திரைப்படம் நிச்சயமாக 100 நாட்கள் தியேட்டரில் ஓடும் என்று சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தெரிவித்துள்ளார்.