“சவால்களை சமாளிக்க தயார்”…, விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்-டின் முதல் பதிவு!!

0
"சவால்களை சமாளிக்க தயார்"..., விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்-டின் முதல் பதிவு!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கார் விபத்துக்கு உள்ளானார். இந்த விபத்தினால், இவருக்கு தலை, முழங்கால், முதுகு உள்ளிட்ட பல பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி, தசைநார் கிழிப்பு உள்ளிட்ட 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த அறுவை சிகிச்சைகளால், ரிஷப் பண்ட் பரிபூரணமாக குணமடைந்து, கிரிக்கெட் வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப பல மாதங்கள் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட்டுக்கு, விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், தனது டிவீட்டர் பக்கத்தில் இவர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக கோப்பை ஹாக்கி.., காலிறுதியில் இந்தியா நுழைவதற்கான வழிகள் இது மட்டும் தான்…, முழு விவரம் உள்ளே!!

இவர் வெளியிட்ட பதிவில், அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு, தொடர்ந்து ஆதரவும், நல்வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், மீண்டு வருவதற்கான பாதையை தொடங்கி விட்டேன். இதனால், எதிர்வரும் சவால்களை சமாளிக்க தயாராகி உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, நம்ப முடியாத ஆதரவு அளித்த, பிசிசிஐ அதிகாரிகள், ஜெய் ஷா உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here