செல்பி எடுக்க வந்த தீவிர ரசிகர்.., ஆத்திரம் அடைந்து மொபைலை தூக்கி எறிந்த முக்கிய பிரபலம் – வீடியோ வைரல்!!

0
செல்பி எடுக்க வந்த தீவிர ரசிகர்.., ஆத்திரம் அடைந்து மொபைலை தூக்கி எறிந்த முக்கிய பிரபலம் - வீடியோ வைரல்!!
செல்பி எடுக்க வந்த தீவிர ரசிகர்.., ஆத்திரம் அடைந்து மொபைலை தூக்கி எறிந்த முக்கிய பிரபலம் - வீடியோ வைரல்!!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது ரசிகரின் செயலை பார்த்து கோபமாகி அவரது போனை வாங்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரன்பீர் கபூர்:

பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரம் பார்ட் 1, ராக்கெட் கேங் மற்றும் கோவிந்தா நாம் மேரா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது தூ ஜூதி மெயின் மக்கார், அனிமல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து வரும் ரன்பீர் கபூர் நடிகை ஆலியாபட் என்பவரை காதலித்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் திருமணமான இரண்டு மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது சோசியல் மீடியாவில் அறிவித்தார் ஆலியாபட். இதனை பலரும் கலாய்த்து வந்த நிலையில், அதை எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ரன்பீர் கபூர் ரசிகருக்கு செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் குழந்தையிலேயே இம்புட்டு டார்ச்சர் அனுபவச்சாரா? ரகசியங்களை உடைத்த அவரின் சொந்த தங்கை!!

அதாவது சமீபத்தில் ரன்பீர் கபூரிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்தார். அப்போது அந்த ரசிகர் எடுக்கும் போது புகைப்படம் சரியாக விழாமல் இருந்துள்ளது. தொடர்ந்து எடுத்த போதும் புகைப்படம் நன்றாக எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரன்பீர் கபூர் ரசிகனின் போனை கையில் வாங்கி தூக்கி எரிந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here