தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வங்கிகளில் பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் சேவைகள் பயன்படுத்தினாலும் இன்றளவும் சில நபர்கள் வங்கிக்கு செல்லும் வழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். மேலும் வங்கிகளின் வளர்ச்சிக்கேற்ப ஊழியர்களின் ஊதியம், அலுவலக நேரம் என சில மாற்றங்களையும் அரசு செயல்படுத்துகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் அவ்வப்போது வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பழைய முறைப்படி வார வேலை நாள், ஓய்வூதியம் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30, 31 ஆகிய தினங்களில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்களுக்கு சாதகமாக உடன்பாடு ஏற்பட்டதால் ஜனவரி 31ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாக வங்கி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.