நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியா?? இல்லை வாஷிங்டன் சுந்தரா?? ஹர்திக் பாண்டியா பளிச் பேட்டி!!

0
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியா?? இல்லை வாஷிங்டன் சுந்தரா?? ஹர்திக் பாண்டியா பளிச் பேட்டி!!
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியா?? இல்லை வாஷிங்டன் சுந்தரா?? ஹர்திக் பாண்டியா பளிச் பேட்டி!!

நியூசிலாந்து எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்தும் வாஷிங்டன் சுந்தர் குறித்தும் ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை நேற்று விளையாடியது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. இதில், இந்தியா சார்பாக, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் சிவம் மாவி தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. அதிகபட்சமாக, வாஷிங்டன் சுந்தர் (50), சூர்யகுமார் யாதவ் (47) ரன்கள் எடுத்திருந்தனர். இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை கூறியுள்ளார். டி20 ல் தனது முதல் அரை சதத்தை அடித்த வாஷிங்டன் சுந்தர் குறித்து ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா என்பதை விட, நியூசிலாந்துக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் என்று தான் கூற வேண்டும்.

செல்பி எடுக்க வந்த தீவிர ரசிகர்.., ஆத்திரம் அடைந்து மொபைலை தூக்கி எறிந்த முக்கிய பிரபலம் – வீடியோ வைரல்!!

அந்த அளவுக்கு, வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில், பவுலிங், பேட்டிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், பந்து வீச்சில் கூடுதலாக 25 ரன் விட்டுக்கொடுத்து விட்டோம் என்று கூறிய இவர், பேட்டிங்கிலும் தடுமாற்றம் அடைந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இதில் இருந்து பல விஷயங்களை கற்றுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here