பாகுபலி படத்தின் வில்லன் ராணா டகுபதியின் தந்தை சுரேஷ் டகுபதி செய்த காரியத்துக்கு, தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
குவியும் வாழ்த்து:
இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் ராணா நடிப்பில் உருவான பாகுபலி திரைப்படம் உலக அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு பின், உலக அளவில் பேசப்பட்ட நடிகர் ராணா, தெலுங்கில் பல முக்கியமான படங்களில் நடித்தார். அந்த வகையில் இவரின் சொந்த தந்தையான சுரேஷ் டகுபதி செய்த காரியம் இணையத்தில் வெளியாகி பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது ஹைதராபாத் பகுதியில், பஞ்சாரா ஹில்ஸ் என்ற சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது, காரில் சென்ற இவர் திடீரென நடுரோட்டில் நின்று போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்.
இணையத்தில் கசிந்த தளபதி 67 வில்லனின் கெட்டப்.., ஆஹா ஏதோ பெருசா சம்பவம் பண்ண போறாரு லோகேஷ்!!
மிக நேர்த்தியாக, போக்குவரத்து நெரிசலை இவர் சமாளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் ராணாவின் தந்தையை மனதாரப் பாராட்டியதுடன், இதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும், உங்களின் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.