நாடு முழுவதும் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் 12.32 லட்சம் வாக்காளர்கள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 16ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனால் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.