தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 26) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, நான் சொன்ன கதையை விஜய்யைப் பொருத்தி எல்லாரும் பேசியது எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது என குறிப்பிட்டுள்ளார். விஜய்யை சிறுவயதில் இருந்து பார்க்கிறேன், அவராக கஷ்டப்பட்டு இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என தெரிவித்தார். இப்போது அவர் அரசியலில் வருவதாக கேள்விப்பட்டேன், அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என கூறி நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது இவரின் கருத்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
செல்லப்பிராணி உடன் ‘கேப்டன் COOL’ தோனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!