கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி குரூப் 2, 2A போட்டி தேர்வின் மெயின்ஸ் தேர்வை, மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் TNPSC தேர்வாணையம் நடத்தி இருந்தது. அன்று மதுரை உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் வினாத்தாளில் பதிவெண் மாறி இருந்ததாக புகார் வெளிவந்ததால், சரிசெய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் நல்ல மனநிலையில் தேர்வை எழுத முடியவில்லை என விருதுநகரை சேர்ந்த தேர்வர் கருப்பையா, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதேபோல் மதியம் நடந்த மெயின்ஸ் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். மனுவை பரிசீலித்து நீதிபதிகள், “வினாத்தாள் மாறியதாக கூறுவது யூகம் மற்றும் செவி வழி செய்தி என்பதே விசாரணையில் தெரிகிறது. காலையில் நடந்ததை போல் மதியம் வினாத்தாள் மாற்றி கொடுத்ததாக எதுவும் இல்லை. டிஎன்பிஎஸ்சி நடவடிக்கையில் முழு திருப்தி தான். இனிவரும் காலங்களில் கூடுதல் கவனத்துடன் TNPSC செயல்பட வேண்டும்.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
காக்கா கழுகு சர்ச்சை.. நீண்ட நாள் சண்டைக்கு செக் வைத்த ரஜினி.. முழு விவரம் உள்ளே!!