பாட்னாவில் புரோ கபடி லீக் தொடரின் இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜனவரி 26) யு மும்பா அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இரு அணிகளும் கடைசி வரை போராடிய நிலையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 44-35 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், பாட்னா அணியின் மஞ்சித் மற்றும் சச்சின் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், பாட்னா பைரேட்ஸ் 44-28 என்ற புள்ளி வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.