கொரோனா தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் வெளிநாட்டு பாலைவனத்தில் சிக்கித் தவித்து இருந்த நடிகர் பிருத்விராஜ் & படக்குழு இன்று கேரளா வந்தடைந்து உள்ளனர்.
ஜோர்டன் படப்பிடிப்பு:
மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்பவர் பிருத்விராஜ். இவர் தமிழிலும் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிளஸ்சி இயக்கத்தில் ஆடுஜீவிதம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் மாதம் படக்குழுவுடன் ஜோர்டன் சென்றிருந்தார். கொரோனா தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அங்கு சிக்கிக்கொண்டனர்.
இருப்பினும் ஜோர்டன் படப்பிடிப்புகளை நடத்தி முடித்தனர். இந்நிலையில் இந்திய அரசு வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் மூலம் 2 மாதத்திற்கு பின்னர் நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 57 பேர் இன்று டெல்லி வந்தடைந்தனர். பின்பு அங்கிருந்து இருவேறு விமானங்கள் மூலம் கொச்சி வந்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |