தமிழகத்தில் நாளை முதல் சென்னையைத் தவிர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ ரிக்ஸாக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோக்கள் அனுமதி:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாய பணிகளுக்குத் தவிர மற்ற பணிகளுக்கு ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. 50 நாட்களுக்கு மேலாக ஆட்டோக்கள் ஓடாததால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்குமாறு ஆங்காங்கே போராட்டம் நடைபெற்ற நிலையில் நாளை முதல் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோ ரிக்ஸாக்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு ஆட்டோவில் ஒரு பயணிக்கு மேல் ஏற்றக்கூடாது எனவும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் கூறப்பட்டு உள்ளது. மேலும் பயணிகள் மற்றும் ஓட்டுனர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஆட்டோவில் சானிடைசர்கள் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் ஆட்டோக்களை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |